மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழகத்தில் பிறந்து இந்தியா முழுக்க பிரபலமாகி, பாலிவுட்டின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான நடிகை ஸ்ரீதேவி, எதிர்பாரதவிதமாக துபாயில், சனிக்கிழமை அன்று மரணம் அடைந்தார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் பாத்ரூமில் தடுமாறி, குளியல் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்தார்.
பிரேத பரிசோதனை, எம்பார்மிங், துபாய் அரசின் ஒப்புதல் உள்ளிட்ட பல நடைமுறைகளை கடந்து மூன்று நாட்களுக்கு பிறகு துபாயிலிருந்து ஸ்ரீதேவி உடல் நேற்று இரவு மும்பை வந்தது. முதலில் ஸ்ரீதேவியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், இன்று காலை 9.30 மணிக்கு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் மட்டுமல்லாது, அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நண்பகல் 2 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. மாலை 3.30 மணியளவில் மும்பை, வில்லேபார்லே மயானத்தில் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.